படித்ததில் பிடித்தது என ஒரு பகுதி துவங்கலாம் என உள்ளேன். எனக்கு பிடித்த, என்னை பாதித்த வரிகளும் அதன் மூலமும் இப்பகுதியில் இடம்பெறும்.
முதலாவதாக
"என் பதிவு திருமணத்திற்குச் சென்றோம். காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று நாங்கள் அன்று மாலை 4 மணிக்குத் தான் திரும்பினோம். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் எங்கள் பதிவு காலதாமதம் ஆனது. அன்று பல முறை எங்களைக் குமாஸ்தாக்களை வைத்து பேரம் பேசினார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று 10க்கும் மேற்பட்ட பதிவுகள் அதிரடி வேகத்தில் முடிந்தன. மெல்ல விசாரித்தபோது சாதாரன பதிவு என்றால் ஒரு ரெண்டாயிரம்தான் வாங்குவோம். இன்னிக்கி வந்தவங்க எல்லாம் அமெரிக்காவுல வேலை செய்யும் இந்தியர்கள். அவங்களால இங்க காத்திருக்க முடியாதுனு பதிவுக்குப் பத்தாயிரம் குடுத்தாங்க. அப்புறம் என்ன, எங்க அய்யா அவங்கள நிக்க வெக்க கூடாதுன்னுட்டாரு என்றார். லஞ்சத்தின் ரேட்டை இப்படித்தான் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மத்தியதர வர்க்கமும், வெளிநாட்டு இந்தியர்களும், கார்ப்பரேட்டுகளும் வானுயர உயர்த்தினார்கள். இவர்கள்தான் தங்களை ஒரு சூப்பர் பிரஜைகளாக சதா நினைத்து உயிர் வாழ்கிறார்கள்".
அ. முத்துக்கிருஷ்ணன்
முழுவதும் படிக்க
http://uyirmmai.com/contentdetails.aspx?cid=4976